மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 47

மனிதனின் குண இயல்பின் அடிப்படையில் தான் அவனது தாரதம்யம் அமைகின்றது. ஒருவரது ஜாதி என்பது இந்தக் குணங்களின் அமைப்பினால் தான் உருவாக்கப்பட்டது. சத்வ குணம் மேல் நிலையிலும் அதற்கடுத்து ரஜோ குணமும் அதற்கும் கீழாகத் தாமச குணமும் அமையப் பெற்றவர்கள் அமைதியும், ஆழ்ந்த சிந்தனைத் திறனும், அறிவாற்றலும் கொண்டு செயல்படுபவர்கள் என்பதனால் இத்தகையவர் பிராமணர் என்றழைக்கப்பட்டனர்.

ரஜோ குணம் மேலேயும், சத்வ குணம் இரண்டாவதாகவும், தமோ குணம் மூன்றாவதாகவும் இருந்தால், அவர்கள் சுறுசுறுப்பாக, லட்சியப் பிடிப்போடு சாதிக்க முயன்று, சமுதாய முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைப்பார்கள். இந்த குணம் சத்திரியர்களுக்குரியது.

முதலில் ரஜோ குணம், அடுத்ததாகத் தமோ குணம், அதனை அடுத்து சத்வ குணம் என்ற ரீதியில் அமைந்தவர்கள் தமக்காகத் தம் சுய முன்னேற்றத்திற்காகக் கருத்துடன் உழைப்பவராக, எதற்கும் கணக்குப் பார்ப்பவராக இருப்பார்கள். அவர்கள் வைசியர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

தமோ குணம் அதிகமாயும், ரஜோ குணம் அடுத்ததாயும், சத்வ குணம் கடைசியாயும் அமைந்த இயல்பினர் சூத்திரர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்கு மேலாக வேறு எதையும் கவனிக்க மாட்டார்கள். எது நடந்தாலும் என்ன என்று பார்க்க மாட்டார்கள். பிறர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் செயலாற்றும் இவர்கள், சாப்பிடுவதும் துhங்குவதுமே போதும் என்ற உணர்விலேயே இருந்து கொள்வார்கள். இவர்களிடம் மந்த புத்தியும் சொல்வதைச் செய்யக்கூடிய தன்மையும் மட்டும் தான் இருக்கும். சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறமை இருக்காது.

இந்த நான்கு பிரிவுகளும் குணத்தால் அமைக்கப்பட்டவையே அன்றி அடிப்படையில் பேதமில்லை. யார் எந்தக் குலத்தில் பிறந்தவராயிருப்பினும் அவரது குணத்தை உற்றுப் பார்த்து அவர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடியும்.

சாத்வீகக் குணம் ஓங்கி நின்றால் மனம் அலை பாயாது. அமைதியில் ஆழ்ந்திருக்கும். ரஜோ குணம் அதிகரித்தால் படபடப்பும் வேகமும் மன ஓட்டமும் அதிகரிக்கும். தமோ குணம் அதிகரித்தால் சோர்வு ஏற்பட்டு மந்த நிலையில் துhங்;கித் துhங்கி வழிவர். எந்த குணம் ஓங்கி இருக்கிறதோ அதற்கேற்ப அவரது செயல் அமையும்.

ஆன்மீக சாதகர்களுக்கு சாத்வீகக் குணம் தான் ஓங்கியிருக்க வேண்டும். ஏனெனில் சாத்வீகக் குணம் மன அமைதியில் தான் பூரணமாக அமைந்திருக்கும். மனத் துhய்மையுடன் இருப்பவர்களுக்குத் தான் மன அமைதி ஏற்படும். இந்நிலையில் இருந்தால் தான் ஆன்மா ஒளிர்வதை உணர முடியும். அலைவதும் அலைக்கழிப்பதும் இந்த மனம் தான். சூட்சுமமாக செயல்படும் இந்த மனம் சாத்வீகத்தில் ஆழ்ந்திருந்தால் நம்முள் அமைதியும் ஆனந்தமும் நிலைத்திருக்கும்.

நம் மன ஓட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துச் சரிசெய்யத் தெரிந்தால்தான் நம் விருப்பப்படி அதை இயக்க முடியும். இது தெரியாவிட்டால் மனம் நம்மை எங்கோ இழுத்துக்கொண்டு போய்விடும். ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட விடாது. மாயை இதற்குத் துணை செய்யும். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சாத்வீகக் குண நிலையில் இருந்தால் தான் தகுந்த பதில் கிடைக்கும். ஞானம் வளர வளரத்தான் இந்நிலை ஏற்படும். மூன்று குணங்களிலும் சாத்வீகக் குணம் தான் சிறந்தது. சத்தியத்திற்குரிய குணம் இது. தெய்வாம்சம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவது இந்த குணமுடையவர்களைத்தான். நற்குண இயல்புகள் எல்லாமே சத்துவ குணத்தில் தான் அடங்கியுள்ளன.

மனிதப் படைப்பின் அடிப்படைக் குண இயல்புகளை இப்படி விவரித்த பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் இந்த மூன்று குணங்களும் எப்படி ஆத்மாவை மீண்டும் மீண்டும் பிறவித் தளையில் சிக்க வைக்கின்றன என்பதை விவரிக்கின்றார்.

“சத்வகுணம் நிர்மலமானது. எங்கும் பிரகாசிப்பது. இது சுகம், ஞானம் இரண்டிலுமுள்ள ஈடுபாட்டினால் ஆத்மாவை இதயத்தில் கட்டுப்பட வைக்கிறது. ரஜோ குணம் ஆசையையும், பற்றுதலையும் ஏற்படுத்துவது. இந்த குணம் தீவிர விருப்பத்தின் வடிவம். நிறைவேறாத ஆசைகளுடன் மரணிக்கின்ற ஜீவன் அந்த ஆசைகளை மீண்டும் நிறைவேற்றிக்கொள்ளப் பிறவி எடுக்க ரஜோ குணம் காரணமாகிவிடுகின்றது. தமோ குணம் அஞ்ஞானத்திலிருந்து ஏற்படுகின்றது. நான் யார் என்ற உண்மையை ஜீவன் அறியும் வரை தமோ குணம் இருக்கும். நான் இந்தப் பிறவியல்ல என்பதை ஜீவன் முழுவதுமாக அறிந்து தெளிகின்றவரை பிறவிகள் தொடரும். எல்லாப் பிராணிகளையும் இந்தத் தமோ குணம் மதி மயங்க வைக்கிறது. அறியாமை, பேதமை, சோம்பல், துhக்கம் மூலமாக ஆத்மாவை இந்த உடலில் அது கட்டுப்படுத்தி வைக்கிறது!”

“இந்த மூன்று குணங்களும் மனிதனை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆட்டிப் படைக்கின்றன. சத்வ குணம் சுகபோகத்தில் ஈடுபடுத்தித் தன் அதிகாரத்தைக் காட்டுகிறது. ரஜோ குணம் செயல்களில் ஈடுபடுத்தித் தன் உரிமையை மனிதரிடம் நிலை நாட்டுகிறது. தமோ குணமோ ஞானத்தை மறைத்துத் தவறிழைக்கும் பேதமையில் ஈடுபடுத்தி மனிதனை ஆட்கொண்டு விடுகிறது. கீழ் நிலைக்குத் தள்ளி விடுகின்றது!”

“ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் அழுத்திவிட்டு சத்வ குணம் வளர்கின்றது. சத்வ குணத்தையும், தமோ குணத்தையும் அழுத்திவிட்டு ரஜோ குணம் வளர்கிறது. இதே போல் சத்வ குணத்தையும், ரஜோ குணத்தையும் அழுத்திவிட்டுத் தமோ குணம் மேலே எழும்புகிறது.”

“எப்போது இந்த மனித சரீரத்தில் ஐம்புலன்களிலும், உள்ளத்திலும் தூய்மையும், பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்வகுணம் வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.”

“எப்போது மனிதரின் உள் மனதில் பண ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுகபோகங்களுக்காகவும், சொத்துக்கள் சேர்க்கவும், புதுப் புதுக் காரியங்களைத் தொடங்குகின்ற மனப்போக்கு ஏற்படுகின்றதோ, எப்போது மனதில் தீவிர ஆசையும், மன அமைதியின்மையும் அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை துhக்குவதை உணர்ந்துகொள்ள வேண்டும்.”

“எப்போது புலன்களிலும், உள்ளத்திலும் உணர்வுத் துhய்மை இல்லாதிருக்கிறதோ, எந்தக் காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும், செய்யக்கூடாத காரியங்களைச் செய்வதும் அதிகரிக்கின்றதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம், நம்மில் தமோ குணம் மேலோங்கியுள்ளதென்று.”

“சத்வ குணம் மேலோங்கியிருக்கும்போது மனிதன் இறந்துவிட்டான் என்றால், அவன் புண்ணியாத்மாக்கள் மட்டுமே அடையத் தகுந்த நிர்மலமான உத்தம உலகங்களுக்குச் செல்கிறான். ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் அவன் மனித குலத்தில் மறுபிறவி பெறுகிறான். தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் இறந்தால், பிராணிகளாக, மிருகம், பறவை போன்ற பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கின்றான்.”

“குணங்களின் தன்மைகளுக்கும் போக்கிற்கும் ஏற்பத்தான் செயல்கள் நிகழ்கின்றன. அந்தச் செயல்களின் தன்மைக்கு ஏற்றபடி அவற்றின் பலன்களும் அமைகின்றன. செய்பவனின் குணமே செயலின் காரணமாக அமைகிறது. இதை அறிபவன் தன் செயல், குணம் இவற்றிலிருந்து விடுபட்டு, அவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு, தன்னை உணர்ந்தவனாய், பிரும்ம ஸ்வரூபத்தையே அடைகிறான்”.

“அப்படித் தன்னைப் பிரம்மமாக உணர்பவன் விவேகி. உடலை உருவாக்கும் மூன்று குணங்களையும் கடந்து, அப்படிப்பட்டவன் பிறப்பு, இறப்பு, மூப்பு சார்ந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு அமரத்துவ நிலையை அனுபவிக்கிறான்.”

“இவ்வாறு முக்குணங்களையும் கடந்த மா மனிதர் இந்த மூன்று குணங்களும் தன்னிலிருந்து ஆக்க பூர்வமாக, ஒளிமயமாக வெளிப்படும்போதும், எந்தச் செயலிலாவது தன்னை ஈடுபடுத்தும்போதும், அறியாமையால் செய்யப்படும் சில செயல்களாகச் சிலவற்றைச் செய்து விடுகின்ற போதும், அவற்றால் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை. இப்படி ஆயிற்றே! என்று மகிழ்வதோ, வருந்துவதோ, வெறுப்பதோ இல்லை.”

“இக்குணங்கள் மூன்றும் வெளிப்படா நிலையில் இருக்கின்றபோது, இவை தன்னில் வெளிப்பட வேண்டுமென ஆசைப்படுவதுமில்லை. அப்படிப்பட்டவர் இக்குணங்களிடம் விருப்பு, வெறுப்பு அற்றவராக இருப்பார். இக்குணங்களால் தான் பாதிக்கப்படாமலும் இருப்பார். மேலும் மூன்று குணங்களும் தம்மிலிருந்து தம்மை வெளிப்படுத்திக் கொண்டும், செயல்படுத்திக் கொண்டும் இருப்பதையும் அவர் உணர்கிறார்.”

“மேலும் அந்த விவேகி நான் என்பது அவனே! என்பதை அறிந்தவராய், தன் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார். தாமாக எதையும் செய்யவில்லை. என்பதையும், தன்னால் எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதையும் உணர்ந்து, செய்பவன் அவனே என்று அமைதியாக வாழ்கிறார்.”

“அப்படிப்பட்ட மா மனிதரின் நடவடிக்கைகள் சமத்துவ நிலை கொண்டவையாய் இருக்கும். திட சித்தம் கொண்ட அம்மனிதர் தமது தன்னில் தான் தோய்ந்து, சமநிலைப் போக்கில் சுகத்திலும், துக்கத்திலும், மண்கட்டியிலும், தங்கக்கட்டியிலும், உடல், பொறிகள் சார்ந்த விருப்பு வெறுப்புகளிலும், புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும், மதிப்பு, அவமதிப்புகளிலும், பகைவர், நண்பர்களிடமும் சமநிலை பிறழாமல் நிரந்தர அமைதியில் நிலைத்திருப்பார். அவர் ஆவல், ஆர்வம், ஈடுபாடு கொண்டு எந்தப் புதிய காரியத்தையும் தொடங்குவது இல்லை. இதனாலேயே இவர் குணங்களைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறார்.”

இதுவரை எழுதிக்கொண்டு வந்தவை எல்லாமே கீதா வாக்கியங்கள். இவற்றை மாற்றி உரைக்க முடியாது. தன் படைப்பின் மீது பிரம்மம் கொண்ட கருணையினால் மறைந்து கொண்டு வந்த வேத உண்மைகளைத் தானே தன் வாயினால் தனது அவதார வடிவமான கண்ணனின் உருவில் அர்ச்சுனனுக்கு என்று சொல்லி நமக்கெல்லாம் வழங்கிய கொடை இது. இதனைத் திரும்பத் திரும்பப் படித்துத்தான் நம்மைத் திருத்திக்கொள்ள முடியுமே தவிர, ஒரு முறை மட்டும் படித்தால் போதாது. உடனே அவை மறந்து போய்விடும். இதை மனதில் வைத்துக்கொண்டு மேலே தொடருங்கள்.

(தொடரும்…)

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 46

பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற பரிபூரணப் பேரானந்தமாகிய பரப்பிரம்மம், இயற்கையோடு சேர்ந்து பஞ்சபூத சேர்க்கையுடைய இந்த உடலை அடைகின்றது. இயற்கையான ஷேத்திரம் அழியக்கூடியது. அது நானல்ல. அதனுள்ளே இருக்கின்ற ‘புருஷன்’ என்று கீதையில் சொல்லப்படுகின்ற ஷேத்திரக்ஞனே நான்.

அது வேறு, இது வேறு என இரண்டையும் தனித்தனியாக அறிய வேண்டியது, ஆத்ம சாதகனுக்கு மிக அவசியம். இதுதான் ஞானம்.

இந்த உண்மையை இப்படி நன்றாகப் புரிந்துகொண்ட ஞானியருக்கு மறு பிறப்பில்லை. மீண்டும் உடலெடுத்து அதற்குரிய கர்மப்பலன்களை அனுபவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. இப்போது, இதிலிருந்து நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், ஆத்மா வேறு, இந்த உடலோடுகூடிய வாழ்க்கை வேறு. இப்பிறப்பில் நிகழ்பவையெல்லாம் கர்மத் தொடர்பால் வந்தவை. இவற்றை நான் எனதாக ஏற்று அறியாமையுடன் செயல்படாமல், நான் ஆத்மா என்ற உணர்வில் நின்று செயல்பட்டால், பிறகு மறு பிறப்பு இருக்காது. மேலும் கர்மாவை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்வதால், இருக்கின்ற கர்மாவும், நாம் பெற்றுள்ள ஞானத்தால் அழிந்துவிடும். இதைத்தான் நாம் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இது கீதையால் நாம் அறிய வேண்டிய மிகமிக அரிதான ஓர் உண்மை.

மிகச் சுலபமாகச் சொல்ல வேண்டுமென்றால், நான் வெறும் கருவி. நடப்பவையெல்லாம் அவன் விருப்பப்படி நடக்கின்றன! என்று திரும்பத்திரும்ப நாம் நினைத்துக்கொண்டே இருந்தால் சரி. பெரியவர்கள் அடிக்கடி சொல்கின்ற வார்த்தை என்ன? நம் கையில் என்ன இருக்கிறது? நடப்பதெல்லாம் நாராயணன் செயல்! என்று தானே. கீதையின் உட்பொருளே இந்த எளிய வாக்கியத்திற்குள் அடங்கியிருக்கிறது பாருங்கள்.

உடலாகிய இயற்கையுடன் புருஷனாகிய ஆத்மா கலக்காமல் தனித்து இருக்கப் பழகுவதற்குக் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு அந்த இயற்கையையே உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றார். “ஆகாயம் எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருந்தாலும் அது மிக சூட்சுமமாகவும் இருக்கிறது அல்லவா! அது எந்தப் பொருளிலும், பிராணியிடத்திலும் ஒட்டுவதில்லை. அதைப்போலவே மூல புருஷன் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் எந்த உடலிலும் சிறிதும் ஒட்டிக்கொண்டிருப்பதில்லை.”

“உடலினுள் உறைந்தாலும் ஆத்மாவாகிய புருஷன் ஏன் செயல்படாமல், ஒட்டாமல் வெறும் சாட்சியாக மட்டும் இருந்து கொள்கிறான் கிருஷ்ணா?” என்று அர்ச்சுனன் கிருஷ்ணனை இடைமறித்துக் கேட்கிறான்.

அதற்குக் கிருஷ்ணர், அந்தச் சூரியனைக்கொண்டு மீண்டும் விளக்குகின்றார். “அர்ச்சுனா! சூரியன் எல்லா உலகங்களுக்கும் ஒளியை வழங்குகின்றான். ஆனால் அவனது ஒளியினால் பொருள்கள் விளங்குகின்றனவே தவிர, அந்த ஞானஒளியைத் தாம் பெற்றுத் தாமே சுயமாக ஒளிவீசச் செய்யும் தன்மையை அப்பொருள்களுக்குச் சூரியன் தந்துவிடுவதில்லை”.krisha_says

அதாவது சூரியன் இருக்கும் வரை பொருள்கள் தெரியும். சூரியனின் ஒளி மறைந்துவிட்டால் பொருள்கள் தெரியாது. சூரியன் ஒளி மட்டுமே. அப்படி ஒளிர்கின்ற சூரியன் ஒளியைப் படைப்பவனோ, உருவாகும்படி செய்பவனோ அல்லன். அதாவது அந்த சூரியனுக்கும் ஒளியாக இருந்து பிரகாசிப்பதும் பிரம்மமே.

ஞானக் கண்ணால் இவ்வாறு ஷேத்திரமாகிய படைப்பிற்கும், ஷேத்ரக்ஞனாகிய ஆத்மனுக்கும் உள்ள வேற்றுமையைப் பிரித்து உணர்கின்ற ஞானிகள் இயற்கையின் பிடியிலிருந்து விடுபட்டுப் பரம் பொருளை அடைகின்றனர். அவர்கள் தமது வாழ்க்கையில் எது நடந்தாலும் அவற்றோடு சம்பந்தப்படாமல் வெறும் சாட்சியாக மட்டும் இருந்து வாழ்ந்துவிட்டுப் போய் விடுகின்றனர். தம்மை அவர்கள் பரமாத்மாவுடன் இணைத்துக்கொண்டு, உடல் சம்பந்தத்திலிருந்து விலகி நின்று வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்கள் நிலைத்திருப்தால் அவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் எதுவுமே பாதிப்பைத் தருவதில்லை. எனவே ஞானப்பயிற்சி மூலம் பரிணாம முன்னேற்றம் அடைய விரும்புகின்ற யாரும் இனி இந்தப் பொய்யான வாழ்க்கையில் நடப்பவற்றையெல்லாம் உண்மையென்று நினைத்து மனமுடைந்து போகாமல், வருத்தப்படாமல், நடப்பவையெல்லாம் நன்மைக்கே எனத் திடமாய் உணர்ந்துகொண்டு, நான் பிரம்மம்! இவையெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும்! வருவதை ஏற்போம்! என்று திடமாய் இருந்து, பொறுமையாய் ஏற்று வெறும் சாட்சியாய் இருக்க முயற்சித்தல் நன்று.

14.குணத்ரய விபாக யோகம்:

சில சமயம் சிலர் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து, இவன் என்ன இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறான்? குணம் கெட்டு நடக்கின்றானே? என்று பலரும் நொந்துகொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

இப்போது இவன் குணம் சரியில்லை, பிறகு பார்த்துக்கொள்ளலாம்! என்று அவர்களை ஒதுக்கிவிட்டுத் தாம் விலகிப் போகின்ற சம்பவமும் எத்தனையோ பேருக்கு நடந்திருக்கும். இந்தக் குணம் என்பது என்ன? அது ஏன் அடிக்கடி மாறுகின்றது? அப்படி மாறி மாறி நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? போன்ற விபரங்களை நாம் அறிந்து கொள்வதற்கு இந்தக் குணத்ரய விபாக யோகம் என்னும் 14வது அத்தியாயம் கண்ணனால் கீதையாக உபதேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு நாம் பிறரைப் பற்றியும், நம் குண மாறுபாடுகள் பற்றியும் சிந்தித்துப் பார்த்துச் சரியாக நடந்துகொள்ள முடியும்.

த்ரய என்றால் மூன்று என்று பொருள். விபாகம் என்றால் பிரிவுகள் என்று பொருள். மனிதப் படைப்பில் அமைந்துள்ள மூன்று விதமான குணங்களை ஆராய்ந்து பார்க்கின்ற அத்தியாயம் இது. இந்த மூன்று குணங்களின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு விட்டால், ஒருவன் இந்தப் பிறவிப் பெருங்கடலை மகிழ்ச்சியாகத் தாண்டிவிட முடியும். மனித மனதின் தன்மை, அதன் போக்கு, செயல்பாடு போன்றவற்றை முழுவதுமாக அலசிப் பார்க்கின்றது இவ்வத்தியாயம்.

எத்தகைய மனிதர் என்றாலும் அவர் முக்குணங்களின் அடுக்குகளாய் அமைந்தவராகவே இருப்பார். அந்த முக்குணங்கள், சாத்வீகம், ரஜோ குணம், தமோ குணம் என்பவை ஆகும். ஒவ்வொருவரின் இயல்பில் ஒவ்வொரு குணத்தின் தன்மை மேலோங்கி நிற்கும். தமக்குரிய அடிப்படைக் குண இயல்பை ஒட்டிய நிலையில் அமைகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப இந்தக் குணங்கள் மாறி மாறி அமையும். இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரவர் கா;மப் பதிவுகளுக்கு ஏற்ப அமைந்து இக்குணங்ளைத் துhண்டிச் செயல்பட வைக்கும்.

சத்வ குணம் மனிதனுக்கு ஞானஒளியையும், நன் மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது. ரஜோ குணம் அவா, பற்று முதலிய குணங்களை அளித்துக் கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது. தமஸ் எனும் தாமச குணம் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது. இம்மூன்று குணங்களும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று அதிகமாக இருக்கும். அவற்றிற்கேற்ப மனிதன் செயல்படுவான். பிறக்கும் பொழுதே கர்மப்பதிவுகளின் அடிப்படையில் ஒருவனுக்கு இந்த மூன்று குண இயல்புகள் அமைந்திருக்கும்.

சோம்பேறித்தனத்தை அளிக்கும் தமோ குணத்தை அகற்றி, அதன்பின் படபடக்கும் ரஜோ குணத்தை இல்லாமற் செய்து, பிறகு அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துகின்ற சத்வ குணத்தை வளர்க்க வேண்டும்.

ஒன்றுமே செய்யாமல் சோம்பலாய்ப்படுத்துக் கிடப்பதை விட, ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடத் தொடங்கினால், அந்தப் பழக்கமே இழுத்துக்கொண்டு போய்ப் பிறருக்கு ஏதாவது செய்வோமே என்று உதவியாகச் செயல்பட வைக்கும். தமோ குணத்தை ரஜோ குணமாக்கி, ரஜோ குணத்தை சாத்வீகமாக அமைதிப்படுத்தி உயரும் முயற்சி இது.