Welcome

வணக்கம்.

வாழ்க்கையின் பரபரப்பு எல்லோரையுமே துரத்திக் கொண்டிருக்கிறது. நின்று நிதானிக்க, ஒன்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்க, யாருக்குமே நேரமில்லை என்றாலும் சிலவற்றை நாம் ஐம் புலன்களால் அனுபவிக்கின்றபோது, அடடா! இதை எல்லோருமே ரசிக்கலாமே! என்று ஓர் ஆவல் உள் தூண்டலின் விளைவே. யான் பெற்ற இந்த இன்பத்தை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வழக்கம் போல் உள் உணர்வு தூண்ட, இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். படியுங்கள்! அனுபவியுங்கள்! சிந்தியுங்கள்! உங்களிலும் இன்பம் பெருகட்டும்!

 

என்றும் நட்புடன்,

விஜயா!

Please click on மனிதன் என்பவன் to read the new articles, the posts in the Home page are based on the order of newer post.
The calendar on the right shows “dates highlighted” to indicate articles posted on those dates.
The recent posts on the right shows the most recent posts.
I have included pdf version of each article in the tab for the relevant topics for you to print .

Comments are always welcome.

கடந்த சில அத்தியாங்களில் மூன்று குணங்கனைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து தெய்வீக இயல்புகள் யாவை, அசுர குணங்கள் யாவை என்பனவற்றையும் பரந்தாமன், பார்த்தனுக்கு விளக்கிக் கூறினார் அல்லவா! அவற்றைக் கேட்டபின் அர்ச்சுனனுக்கு ஓர் ஐயம் எழுகின்றது.

‘தர்மநெறியால் அமைக்கப்பட்ட இந்த சாஸ்திர நெறிகளைப் பின்பற்றாமல் மனம் போன போக்கில் தர்மத்தை விட்டு விலகிச் செல்பவர்களுக்கு என்ன கதி கிடைக்கும்? அப்படிப்பட்டவர்களின் நிலை என்ன? ஞானமில்லாதவர்களான அவர்களின் பக்தியும், சிரத்தையும், அவர்கள் செய்கின்ற வழிபாடுகளும் எப்படிப்பட்டவை? அவை சாத்வீகமானவையா? ராஜஸமானதா? அல்லது தாமஸமானதா?” என்று அவன் கண்ணனிடம் கேட்கின்றான்.

மேலும் அவன், ‘சாத்திரங்களின் சட்டதிட்டங்களைப் பின்பற்றாமல், சத்தியத்தை உணராத நிலையில் தெய்வ உருவங்களையும், தேவர்களையும், தேவதைகளையும், மனிதர்களையும் வழிபடுபவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றியடைவார்களா?” என்றும் கேட்கிறான். அந்த வினாக்களுக்குரிய விடையாகவே இந்த சிரத்தா த்ரய யோகம் என்ற அத்தியாயம் அமைகிறது.

ஒருவன் தன்னைப்பற்றிய உண்மைகளை அறியாத நிலையில் அதாவது ஞானம் பெறாத நிலையில் செய்கின்ற பக்தி வழிபாட்டு முறைகள் எந்த விதத்தில் அமைய வேண்டும் என அறியவே அர்ச்சுனன் விரும்புகின்றான். இதைப் புரிந்துகொண்டவராய்க் கண்ணன், ‘அர்ச்சுனா! மனிதர்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற விதத்தில் சாத்வீக, ரஜோ, தமோ முறைகளில் சிரத்தையும், ஈடுபாடும், வழிபடும் முறையும் அமைகின்றன.” என்று பதிலுரைத்தார்.

மேலும் அவர், ‘தன் மனதைச் சுத்தப்படுத்தவும், இறைவனை அடையவும் செய்யப்படுவது சாத்வீக வழிபாடு. தான் உயரவும், பணம், பட்டம், பதவிகளை அடையவும், விரும்பியதைப் பெறவும் செய்வது ரஜோ குண வழிபாடு. பிறருக்குத் தீங்கு விளைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவது தமோ வழிபாடு.” என்று தொடர்ந்தார்.

அது வேண்டும், இது வேண்டும்; என்று கேட்பது வழிபாடல்ல. பிரச்னைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவதல்ல பிரார்த்தனை. உலக நன்மைக்காகவும், தான் பெற்றவைகளுக்காக நன்றி செலுத்தவும், மனத்துhய்மைக்கும், இறைவனை அடைவதற்குமாகச் செய்வதே உண்மையான வழிபாடும், பிரார்த்தனையும் ஆகும். அதோடு மட்டுமின்றி அவரவரின் உள் மன உணர்விற்கு ஏற்றவாறு வழிபாடுகளில் சிரத்தையும், அக்கறையும் ஏற்படுகி;ன்றது.

‘பொதுவாக சத்வ குணத்தில் நிலைத்திருப்பவர்கள் தெய்வ வடிவங்களை வழிபடுகின்றனர். பரம்பொருளால் படைக்கப்பட்ட பல்வேறு சக்திகளுக்கு உருவங்களை அளித்து, அத்தகைய தெய்வங்களை ஆகம முறைகளின்படி கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் ஸ்தாபித்து மந்திர, யாக, பூஜை முறைகளால் தமது நம்பிக்கையை அத்தெய்வீக உருவங்களில் நிலை நிறுத்தி வணங்கிப் போற்றுகின்றனர்.’

‘எங்கும், எல்லாமாக விரிந்து வியாபித்து இருக்கின்ற பிரம்மமே எனக்குள்ளும் இருக்கிறது என்னும் உண்மை தெரிய வருகின்றவரை இவர்கள் தங்களின் மேலான பக்தி உணர்வை இத்தகைய தெய்வ வடிவங்களை வழிபடுவதன் வாயிலாக வளர்த்துக்கொள்கின்றனர். மும்மூர்த்திகளையும், பிற மூர்த்தி வடிவங்களையும்,
இந்திரன், சூரியன், சந்திரன், பஞ்சபூத சக்திகள் என தேவர்களையும் உரிய குறியீடுகளின் வெளிப்பாடாக உருவாக்கித் தகுந்த முறையில் அவர்கள் பூரண நம்பிக்கையுடன் வணங்குகின்றனர்.”

‘புனிதமான சூழ்நிலையில் உண்மையான பக்தியில் தோய்ந்த நிலையில், அமைதியாக, எளிமையாக ஒரு தெய்வ வடிவத்தில், அதன் உயர் சக்தியில் மனதைக் குவித்துப் பூஜை செய்து வழிபடுவதே சத்வ குண வழிபாடாகும்.” தானும், தன் தெய்வமும் என்ற நெருக்கமான பக்தி உயர்வுதான் அந்த பூஜையில் நிறைந்திருக்கும்.

‘ரஜோ குணத்தில் இருப்பவர்களும் வழிபாடு செய்கின்றனர். ஆனால் அவர்களது வழிபாடு யட்சர்களையும், ராட்சதர்களையும் சேர்கின்றது. ஆடம்பரமும், தற்பெருமையும், ஆரவாரமும் கொண்டதாக அவர்களது பூஜை முறைகள் அமைகின்றன. அவர்கள் வழிபடும் தெய்வங்கள் அசுர சக்தி கொண்டவைகளாகக் கடுமையான பயங்கரத் தோற்றம் கொண்ட தேவதைகளாக, அல்லது பராக்கிரமத்துடன் வாழ்ந்த மனிதர்களை வழிபடுவதாக அமைகின்றது.”

‘தமோ குணத்தில் இருப்பவர்கள் பூதங்களையும், பேய்களையும், இறந்தவர்களையும் வழிபடுகின்றனர். ஒரு மனிதனைப் புதைத்த இடத்தில், கல்லறையில் மக்கள் பூ வைத்துப் பூசை செய்து வணங்கி வழிபடுகின்றனர். பேய்களையும், பிசாசுகளையும் வழிபடுவோர் இருக்கின்றனர். செத்துப் போனவர்களைக் குலதெய்வமாக வைத்துக் கொண்டாடுவோர் பலர். இவையெல்லாம் உண்மையான தெய்வ வழிபாடு அல்ல. மாறாகப் பரம்பரையான பழக்க தோஷத்தால் ஏற்பட்டவை. விருப்பு, வெறுப்புகளோடு கூடிய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயச் சடங்குகள் இவை.”

இவ்வாறு ஆசார அனுஷ்டானங்களோடு சத்வ குணத்தில் நின்று செய்கின்ற வழிபாடுகளும், ரஜோ குணத்தோடு கூடிய ஆடம்பர அமர்க்களத்தில் நின்று செய்கின்ற வழிபாடுகளும், அறிவின்மையால், பழக்க தோஷத்தால் தாமஸ குணத்தில் நின்று முறையின்றிக் கீழ் நிலையில் இருந்து செய்யப்படுகின்ற பூஜைகளும் உண்மையானவையல்ல என்பதைக் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விளக்குகிறார். இவையெல்லாம் தன்னைத் தான் அறியாத நிலையில், தனக்கு வாய்க்கப்பட்ட குண இயலபுகளுக்குத் தகுந்தபடி செய்யப்படுபவையே என்றும் அவர் கூறுகின்றார்.

‘சிரத்தை இல்லாத மனிதர்கள் வீண் பெருமை, கர்வம். பேராசை, தீவிர ஈடுபாடு, பிடிவாதம் உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சாஸ்திர விதிகளுக்குப் புறம்பாகக் கொடுமையான தவத்தில் ஈடுபடுகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஐம்பூதங்களால் ஆன தனது சரீரத்தையும், அந்தர்யாமியாக உள்ள ஆத்மாவாகிய என்னையும் அவர்கள் துன்புறுத்துகிறார்கள். இத்தகைய அஞ்ஞானிகளை அசுர சுபாவம் உள்ளவர்களாகத் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார் அவர்.

புராணங்களில் விவரிக்கப்படுகின்ற அசுரர்கள் இத்தகைய கொடுந் தவங்களைச் செய்வதன் மூலம் தெய்வங்களிடம் வரங்களைக் கேட்டுப் பெறுவதை நாம் படித்திருக்கிறோம். அக்னி மூட்டி அதில் நின்று தவம் செய்தல், ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தல், தம் அங்கங்களை வெட்டித் தீயில் போடுதல், பட்டினி கிடத்தல் போன்ற மிகக் கொடிய விதங்களில் உடலை வருத்தி அவர்கள் தவம் செய்வார்கள்.

இத்தகைய தவங்கள் அகங்காரத்துடன் கூடியவை. மேலும் இவர்கள் அழிவைத் தரக்கூடிய வரங்களையே கேட்டுப் பெறுவார்கள். நான், எனது, எனக்கு என்று தான் இவர்களின் வரங்கள் அமையும். இன்றைய சமூகத்திலும் இத்தகைய அசுர வழிபாடு இருக்கின்றது. அலகு குத்துதல், தீ மிதித்தல், சாட்டையால் அடித்துக்கொள்ளல், கையில் சூடம் ஏற்றுதல், அக்கினிச் சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், பறவைக்காவடி எடுத்தல் எனப் பார்ப்பவர்களைத் துடிக்கச் செய்யக்கூடிய கொடுமையான விதங்களில் தங்கள் பிரார்த்தனையை இவர்கள் செலுத்துவார்கள். இது முறையான வழிபாடு அல்ல. அறியாமையுடன் செயல்படுவது.

இந்தியாவின் வட பகுதிகளில் காளியை வழிபடுபவர்கள் முள் பதித்த சாட்டையால் தம்மை அடித்துக்கொள்வார்கள். குர்பானி என்று வாளினால் உடலைக் கீறிக்கொள்வார்கள். இவையெல்லாம் பிரார்த்தனை என்று சொன்னாலும் கொடூரமானவை.

எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் மேற்சொன்ன விதங்களில் இன்னும் பல நாடுகளில், பல மதத்தினரும் தமது வெறியை வெளிப்படுத்தும் விதத்தில் தமது பிரார்த்தனையாகப் பலவித கொடுமையான நடவடிக்கைகளில் உடலை வருத்தும் வழக்கம் இருக்கின்றது. எடுத்துச்சொல்லி யாரையுமே திருத்திவிட முடியாது.

ஒவ்வொருவரும் தாமாகவே இதைப்பற்றிச் சிந்தித்து இதிலுள்ள அர்த்தமற்ற தன்மையைப் புரிந்துகொண்டு தமது அறியாமையை நீக்கிக்கொள்ள வேண்டும்.

சாஸ்திர முறைகள் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால், தக்க பெரியவர்களான சான்றோர்களைச் சென்றடைந்து அவர்கள் கூறுகின்ற நல்லுரைகளின்படி செயல்பட முற்பட வேண்டும். சத் சங்கத்தை சார்ந்த விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

“உனக்கு மற்றவர் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ அதை நீ மற்றவருக்குச் செய்!” என்று அனேகமாக எல்லா மகான்களுமே சொல்லியிருக்கின்றனர். இந்த நெறியை மட்டும் நாம் நம் இயல்பாக ஏற்றுக்கொண்டு நடந்தால் மற்ற எல்லா தெய்வீகப் பண்புகளுமே இதனைப் பின்தொடர்ந்து நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். ஏனெனில் எதிரில் இருப்பவரை நாமாக நினைக்கின்றபோது அவர்களிடம் அவமதிப்பாக, அன்பின்றி, அசுரத்தனமாக நடந்துகொள்ள நம்மால் முடியாது.

மேலும் பார்த்தசாரதி அருளிய தெய்வீக நெறிகளை முறையாக நாம் பின்பற்றி வருகின்றபோது நம்மிடம் உள்ள இயலாமை, ஆற்றாமை போன்ற குறைபாடுகளுக்கும் அது ஒரு அன்பான சிகிச்சை முறையாக அமையும். மேலும் தெளிந்த அறிவும், பகுத்தறிகின்ற தன்மையும் கொண்டவர்களாக நாம் இருந்தால், ஏதாவது ஒரு கட்டத்தில் நான் செய்வது பிழை, நான் செல்கின்ற பாதை தவறான பாதை என்ற உண்மை புரிந்துவிடும். krisha_says

எனவே அசுர இயல்பு கொண்டு இதுவரை வாழ்ந்தவர்கள் கீதை சொன்ன உண்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாக ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்புள்ளம் கொண்டவர்களாக மாற வேண்டும். பக்தி நெறியில் ஈடுபட வேண்டும். சாத்வீகமான சைவ உணவையே உண்ணப் பழக வேண்டும். சத் சங்கத்திற்குச் சென்று அதில் சேர்ந்து பயனடைய வேண்டும். ஆன்மீக நூல்களைப் படிப்பதையும், ஞானிகள், மகான்கள் ஆகியோரின் வாழ்க்கை முறைகளைப் படித்து அறிவதையும், பகவத்கீதை, இதிகாசங்கள் ஆகியவற்றைப் படிக்கவும் ஆர்வம் கொள்ள வேண்டும். நல்ல மனிதர்களிடம் நட்புகொள்ள விருப்பம் ஏற்பட வேண்டும். அதோடுமட்டுமின்றி நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களைப் படிப்படியாகக் கைவிட வேண்டும்.

தெய்வ அருளும், பூர்வஜென்மப் புண்ணியப் பலனும் இருந்தால் அசுர குணங்கள் கொண்டவர்களாக வாழ்ந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் அந்தத் தீய மனிதன் மனம் திருந்தி ஆண்டவனை வழிபட்டு, மேன்மையைப் பெற முயன்றால் அவனுக்கு நிச்சயம் நற்பலன் கிட்டும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் மன மாற்றத்தால் விரைவிலேயே அறநெறிச் செல்வர்களாக மாற முடியும். திருந்தி மேம்பட்ட அத்தகையவர்களிடம் நற்பண்புகளாகிய இறையருட்செல்வம் வளரும்.

பகவத்கீதையைப் படிப்பதற்கும், யாராவது உபதேசமாக சொல்வதைக் கேட்பதற்குமே இறையருள் இருந்தால் தான் முடியும் என்று எம் குருநாதர் அடிக்கடி சொல்வார். எல்லோராலும் இதனைத் தொடர்ந்து கேட்கவோ அல்லது வாசிக்கவோ முடியாது. எத்தனையோ தடைகள் வரும் என்பார் அவர். அப்படி எழுகின்ற தடைகளையெல்லாம் மீறி இக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசித்து வருகின்ற பெருமக்கள் நிச்சயமாகத் தெய்வீக இயல்புகளைத் தம்மில் நிறைத்துக்கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்; அசுரத்தன்மையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

இதை வாசிப்பதோடு நிறுத்தி விடாமல் நன்றாக இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். தங்களுக்குத் தாங்களே அடிக்கடி சுய பரிசோதனை நடத்தி மதிப்பீடு செய்ய வேண்டும். தமது அறியாமையை உணர்ந்துகொள்ள வேண்டும். குறை நிறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற நற்குணங்களை மேலும் வளர்த்து, வேண்டாத தீய குணங்களைப் படிப்படியாகப் போக்கிக்கொள்ளவும் வேண்டும். அதாவது இதுவரை இருந்த தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் மாறமாட்டேன்! நீ உன்னை எனக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டு, என்னை அனுசரித்து நடந்துகொள்! என்று பிறரை வற்புறுத்தாமல், தமது தவறான போக்கை உணர்ந்து பிறர் விரும்பும்படி, பிறர் மதிக்கும்படி இனி நாம் நடந்துகொள்ள வேண்டும். பிறரைத் திருத்த முற்படாமல் அல்லது குறை கூறாமல் நாம் திருந்த முயல வேண்டும். இப்படியெல்லாம் தொடர்ந்து நம்மை நாமே கவனித்து வரவும், அருள்நெறியில் அனைத்தையும் செய்யப் பழகவும் ஆரம்பித்தால், நிச்சயம் கண்ணன் காட்டிய வழி நமக்கு மேன்மையைத் தரும். நிம்மதியைத் தரும். மதிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி.

அத்தியாயம் 17:

சிரத்தா த்ரய யோகம்

சிரத்தை என்ற சொல் தான் இங்கு சிரத்தா என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிரத்தை என்றால் நம்பிக்கையும், அக்கறையும் ஆகும். த்ரயம் என்ற சொல்லுக்கு மூன்று என்று பொருள். ‘சிரத்தாவான் லபதே ஞானம்” என்கிறது கீதை. அக்கறையும், நம்பிக்கையும் கொண்டவருக்குத்தான் ஞானம் ஏற்படும். அதாவது சாத்திரங்கள் சொல்கின்ற உண்மைகளின் மீதும், அவற்றை எடுத்து போதிக்கின்ற குருவின் மீதும் நம்பிக்கை கொண்டு, அவர் உபதேசிக்கின்ற, நம்மைத் திருத்தி உயர்த்தக்கூடிய ஞான நல்லுரைகளை நாம் ஏற்று, கேட்டதோடு விட்டுவிடாமல் அக்கறையுடன் அவற்றை நமதாக்கி நம் வாழ்க்கையைச் செம்மையுற வாழ வேண்டும்.

இந்த சிரத்தை என்பது தெய்வீகமானது, தெய்வீகமல்லாதது, அரக்கத்தனமானது என மூன்று வகைப்படும். அக்கறையுடனும், நம்பிக்கையுடனும் நாம் கற்கின்ற சாத்திர அறிவு உடல் உபாதைகளிலிருந்து, மன உணர்ச்சிகளின் பிடியிலிருந்து, புத்தியின் சிக்கல்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இது தர்மம், இது அதர்மம் என நமக்குக் கற்பிக்கப்படுகின்ற நெறிமுறைகளே சாத்திர தர்மம் ஆகும். இதைத்தான் நாம் நமது கலாச்சாரம் என்று போற்றிப் பாதுகாத்து வருகிறோம்.

இராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் இந்த தர்மநெறிகள் மிக விரிவாகவும், தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் நாமோ அந்தக் கதைகளில் வருகின்ற முரணான கருத்துக்களில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வீண் விவாதம் புரிந்துகொண்டிருக்கின்றோமே தவிர அப்படிச் சொல்லப்பட்டுள்ள தர்மநெறிகளை மனதில் பதித்துக்கொண்டு அதன்படி நடக்க முயல்வதில்லை. இதைத்தான் ‘படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழி சுட்டி நிற்கிறது போலும். ஆயிரம் புத்தகங்கள் படிப்பதால் பயனில்லை. உள்ளம் பண்பட வேண்டும். பக்குவப்பட்ட மனம்தான் தெய்வீகமாக மாறும். மலரும்..
(தொடரும்..)

கண்ணனின் தெளிவான பட்டியல்களின் மூலம் நாம் இப்போது தெய்வீகக் குணங்கள், அசுரத்தனமான குணங்கள் எவையெவை என்பதைத் தெரிந்துகொண்டு விட்டோம். இப்போது நாம் நம்மிடம் உள்ள நல்ல, உயர்ந்த குணங்கள் யாவை? கெட்டதான தீய குணங்கள் என்னென்ன? என்று முதலில் சிந்திக்க வேண்டும். அடுத்து, என்னென்ன நல்ல குணங்கள் நம்மிடம் இருக்கிறதோ அவற்றை வளர்த்துக்கொள்ளவும், என்னென்ன நல்ல குணங்கள் நம்மிடம் இல்லையோ அவற்றை ஏற்படுத்திக்கொண்டு ஏற்றுக்கொள்ள முற்படவும் வேண்டும். அதோடு நம்மிடம் என்னென்ன அசுர குணங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து அவற்றை வளர விடாமல் கட்டுப்படுத்திப் பின்னர் அவற்றை அறவே அழித்து ஒழித்துவிட சிரத்தையும், அக்கறையும்; கொண்டு கண்காணிப்போம். பகவத்கீதை நமக்குக் காட்டும் உயர்விற்கான உன்னத பாதை இது.

மேலும் கிருஷ்ணர், ‘தெய்வீகக் குணங்களாகிய செல்வம் பிறவிப் பெரும் தளைகளைப் போக்கி வீடுபேறு அளிக்க வல்லது. அசுர சம்பத்து எனப்படும் தீய குணங்கள் பந்தங்களை ஏற்படுத்தி, ஜனன மரணச் சுழலில் சிக்க வைக்கிறது” என்று அர்ச்சுனனை எச்சரிக்கின்றார். அதோடு அவர், “அர்ச்சுனா! நீ கவலைப்படாதே! நீ தெய்வீக சம்பத்தைப் பெற்றிருப்பவன்!” என்று அவனை ஆசுவாசப்படுத்துகிறார். மேலும் தொடர்ந்து அவர் அசுரத்தன்மை கொண்டவர்களின் நடவடிக்கை பற்றி இவ்வாறு விவரிக்கின்றார்.

“இந்த உலகில் நல்லவர்கள், கெட்டவர்கள் என இருவகை மனிதர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் அசுரர்களைப்பற்றி விரிவாகக் கேட்டுக்கொள். அசுர குணம் கொண்டவர்கள் எதில் ஈடுபட வேண்டும், எதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்னும் முறையை அறிந்துகொள்வதில்லை. அவர்களிடம் தூய பக்தி, தூய வழிபாடு, தூய நடத்தை ஆகியவை இருப்பதில்லை. அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை.”

“அவர்களின் பார்வையே விபரீதமானது. அவர்களது கருத்து, இந்த உலகம் பொய், இதில் உள்ள சாஸ்திரம், அறநெறி, தர்மம் எதுவும் உண்மையில்லை; இவ்வுலகில் தர்மம், அதர்மம், புண்ணியம், பாவம் முதலிய நெறிகளுக்குச் சிறிதும் மதிப்பு கிடையாது; இந்த உலகைப் படைத்தவன் கடவுள் இல்லை; ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்; அவர்களின் சேர்க்கையால் இந்த மானிட சமூகம் பிறந்தது; உலகம் உருவாயிற்று. ஆகையால் உலக உற்பத்திக்குக் காரணம் காம இச்சைதான்; இதைத் தவிர வேறு எதுவும், எவரும் காரணமில்லை போன்ற விபரீத எண்ணங்கள் கொண்டவர்களாகவே அவர்கள் திகழ்கின்றனர்.”

“இப்படிக் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட அவர்கள் ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை. அவர்களின் அறிவு கீழ்த்தரமானது. அவர்களது செயல்கள் உக்கிரமாக, அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. அசுரர்கள் இவ்வுலகிற்கே எதிரிகள். இத்தகைய அசுரத்தன்மை கொண்டவர்களின் திறமை, வலிமை எல்லாம் பிறரை அழிப்பதற்காகவே ஏற்பட்டிருக்கிறது.”

“மேலும் அந்த அசுரர்கள் எப்போதுமே நிறைவேறாத பேராசைகளுக்கு அடிமையாகின்றார்கள். பகட்டு, செருக்கு, மமதை வெறி நிறைந்து செயல்படுகின்றார்கள். மிக மோசமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் மதி மயக்கம் காரணமாகப் பல தீய கருத்துக்களைப் பிடிவாதமாக மேற்கொண்டு சமூகத்தைச் சீர் குலைத்து வருகின்றார்கள்.”

இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் மேலும் அசுரர்களின் குணக் குறைபாடுகளை அர்ச்சுனனுக்குச் சொல்லிக்கொண்டே வருகிறார். ‘அவர்கள் சாகும்வரை நிம்மதியை இழந்து பெரும் கவலைகளுக்கும், குழப்பங்களுக்கும் அடிமையாகின்றனர். உலகத்தில் வாழ்வது உண்டு, உறங்கி, சுகித்திருப்பதற்கே என்று தீர்மானித்து, சுயநலப் போக்குடன் பொருள்களைச் சேகரிப்பதிலும், அவற்றைச் சேமிப்பதிலும், அனுபவிப்பதிலேயுமே ஈடுபட்டு விடுகின்றனர்.”

‘ஏராளமான ஆசைகளில் சிக்கிய அவர்கள் காமம், குரோதம், மதம், மாச்சர்யம் முதலிய தீய இயல்புகளை மேற்கொள்கின்றனர். சுகபோக வாழ்க்கையை உண்மையென நம்பி அநியாய வழிகளில் பொருள்களை ஈட்டுகிறார்கள். இதற்காகப் பல முறைகேடுகளை மேற்கொள்கிறார்கள். பணப் பித்து பிடித்தவர்களாகச் செயல்படுகிறார்கள். மேலும் தாம் எல்லாமே மிகச் சரியாகச் செய்வதாக மமதை கொண்டு, தம் மனம் போன போக்கில் அறியாமையுடன் கூடிய நிலையில் யாகங்களைச் செய்தும், தான தர்மங்களைச் செய்தும், கேளிக்கைகளில் மூழ்கியும் தம்மைத் தாமே நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டு மதி மயங்கி பயங்கர நரகத்தில் வீழ்கின்றனர்.”

‘இவர்கள் நற்காரியங்களைச் செய்தாலும், பகட்டாகவும், போலித்தனமாகவும் செய்கின்றாகள். தம் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ளவே இவற்றைச் செய்கின்றார்களே தவிர உள்ளம் தோய்ந்து, முறைப்படி ஒழுங்காகச் செய்வதில்லை. பெயரும், புகழும் பெற்றால் போதும் என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.”

‘இவர்கள் இவ்வாறு செயல்படுவதற்குக் காரணம் அகந்தை, வீண் பிடிவாதம், கர்வம், பேராசை, வெஞ்சினம் ஆகியவற்றின் பிடியில் அகப்பட்டு அவற்றால் இயக்கப்படுவது தான். மேலும் இந்தத் தீயவர்கள் தம்மிடம் உள்ள அந்தர்யாமியாக விளங்குகின்ற என்னை மதிப்பதில்லை. மாறாக வெறுக்கின்றனர். என்னிடமும், என் பக்தர்களிடமும் உள்ள பண்புகளை அவர்கள் குற்றமாக, தீமையாகக் கருதுகிறார்கள்”.

‘இப்படி அவர்கள் தூய்மையற்று நீசத்தனமாகத் திகழ்வதால் அவர்களை நான் மீண்டும் மீண்டும் நாய், கழுதை, புலி, காக்கை, ஆந்தை, கழுகு, பாம்பு, தேள் முதலிய அசுரத்தன்மை கொண்ட இனங்களில் பிறந்து மடியும்படி செய்து விடுகிறேன். இப்படிக் கீழ் நிலையிலேயே கிடந்து உழல்வதால் அந்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் அசுரப் பிறவிகளாகவே பிறக்கிறார்கள். பிறகு அவற்றை விட மோசமான, பயங்கர நரகங்களில் வீழ்கிறார்கள்.”

‘இவ்வாறு அவர்கள் கீழ்நிலைப் பிறப்பிலும், நரகத்திலும் மாறி மாறி உழல்வதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள தீவிர இச்சை, குரோதம், பேராசை ஆகியவையே. இந்த மூன்று தீய குணங்கள் யாரிடம் உள்ளனவோ அவர்கள் ஒருநாளும் உயர்வடைய முடியாது. எனவே இம்மூன்று தீய குணங்களையும் விட்டுவிட வேண்டும்.”

மேலும் பரந்தாமன் புகல்கின்றார், ‘குந்தியின் புதல்வனே! எந்த மனிதன் நரகத்தில் கொண்டு சேர்க்கக்கூடிய அந்த மூன்று தீய பண்புகளையும் தன்னிடம் சேர விடாமல், தன் ஆத்ம நலனுக்காக அறநெறியுடன் வாழ்கிறானோ அவன் மேலான நற்கதியை அடைகின்றான். சாஸ்திரங்களுக்குப் புறம்பான செயல்களை ஒதுக்கித் துறந்துவிட்டுத் தனது மேல் நிலை அடைவதற்கான முயற்சியில் பற்றுதல், பேராசை இல்லாமல் கடமைகளைச் செய்து வருபவன் நன்னெறியாளனாக மதிக்கப்படுகின்றான்.”

‘எந்த மனிதர் சாஸ்திர விதிகளைப் புறம் தள்ளித் தம் மனம் போனபடி நடக்கிறார்களோ, தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடி செயலாற்றுகின்றார்களோ, நல்லவைகளை ஒதுக்கியும், தீயவைகளை மேற்கொண்டும் வாழ்கிறார்களோ அவர்களுக்கு நற்கதி கிடைப்பதில்லை. மேலும் அவர்களுக்கு அந்தக்கரண சுத்தி ஏற்படுவதில்லை. (அதாவது உள்ளத்தில் துhய்மை ஏற்படாது). அவர்களுக்கு உண்மையான ஆத்ம சுகம் கிட்டுவதில்லை. நற்கதி ஏற்பட வாய்ப்பே இல்லை.”

இவ்வாறு பகவான் அருளிய நல்லுரைகளைக் கவனத்துடன் கேட்ட அர்ச்சுனன், ‘நல்ல செயல், தீய செயல் ஆகியவற்றை எவ்வாறு அறிவது கண்ணா?” என்று வினவுகின்றான். அதற்குக் கிருஷ்ணர், ‘சாஸ்திரங்களில் சொல்லப்படுகின்ற அறநெறிகளை நன்றாகத் தெரிந்துகொண்டு அவற்றை முறையாகச் செய்து வர வேண்டும். சாஸ்திரங்களால்; மறுக்கப்பட்ட செயல்களைத் தீயவை என அறிந்து செய்யாமல் விட்டுவிட வேண்டும். செய்யத்தக்கன, செய்யத்தகாதன என அனைத்துச் செயல்களுக்கும் சாஸ்திரப் பிரமாணம் தான் எடுத்துக்காட்டு” என்று கூறி முடிக்கின்றார்.

பகவான் அர்ச்சுனனுக்கு உபதேசித்த அந்த 26 தெய்வீக சம்பத்தான நற்குண இயல்புகள் (சென்ற வார தொடர்ச்சி..)

11 வாய்மை: கண்டதையும், கேட்டதையும், அறிந்ததையும் உள்ளபடி அப்படியே இனிய சொற்களால் சொல்வது
12 சினவாமை: எவரிடமும், எதனிடமும் குரோதம் கொள்ளாதிருத்தல்.
அதாவது, எல்லாமே ஈஸ்வர சொரூபம் என்ற உணர்வுடன் பழகுதல்
13 துறவு: உலகியல் ஆசைகளை, விருப்பு வெறுப்புகளைத் துறப்பது.(உள்ளத்தால்)
14 அமைதி: உள்ளத்தில் விருப்பு, வெறுப்புக்களால் ஏற்படும் சஞ்சலங்களை இல்லாமற் செய்வது.
அதாவது, மனம் எந்தவித சலனமும் இன்றி ஆழ்கடல் போல் அமைதியாய் இருத்தல்.
15 கோள் பேசாதிருத்தல்: பிறர் இல்லாத சமயத்திலோ அல்லது ஒருவர் சென்ற பின்போ புறம் பேசக்கூடாது. அவர்களின் குற்றம் குறைகளை அவர்களுக்குத் தெரியாமல் பிறரிடம் கூறி இழிவு படுத்தக் கூடாது.
16 ஜீவ தயை: எல்லா உயிரினங்களிடமும் கருணை கொள்ளல். இரக்கம், பரிவு கொண்டு பழகுதல். இதற்கு எல்லாமே அவன் தான் என்ற உணர்வு நம்மில் ஏற்பட வேண்டும்.
17 அவாவின்மை: உலகியல் பொருள்களில் பேராசை கொள்ளாமல் இருத்தல். போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற பழமொழியே இதற்கு ஏற்ற பொருள் தருகின்றது.
18 மென்மை: எந்நேரமும் கனிந்த, மென்மையான இதயத்தைக் கொண்டிருத்தல்.
அதாவது, சொல்லும் செயலும் மென்மையாக அமைதல் சிறப்பு.
19 நாணுடைமை: செய்யத்தகாததைச் செய்வதில் வெட்கப்படுதல்.
பெரியவர்களால் இவற்றைச் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட கீழான செயல்களில் ஈடுபடத் தயங்கி வெட்கப்பட்டு ஒதுங்குதல் நல்ல குணமாகும்.
20 சலியாமை: சபல சித்தம், அவசரப்படுதல் இரண்டினாலும் சஞ்சலப்படாமல் இருத்தல்
21 ஒளி: உடல், வாக்கு இரண்டிலும் பொலிவும், செல்வாக்கும் கொண்டிருத்தல். இதனை தேஜஸ் என்று சொல்வார்கள்.
22 பொறையுடைமை: வலிமை. தண்டனை அளிக்கும் அதிகாரமும், திறமையும் இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்.
அதாவது, ஒருவன் உன் கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு என்ற இயேசு நாதரின் பொன்மொழி இதற்குப் பொருத்தமானது.
23 மன உறுதி: எந்தச் சூழ்நிலையிலும் தைரியமும், பொறுமையும் கொண்டிருத்தல்.
மன உறுதிதான் உடல் நலத்தையும் காக்கும். குறிக்கோளை அடைய வைக்கும்.
24 தூய்மை: உடலையும் உள்ளத்தையும் துhயதாக வைத்திருத்தல்.
சுற்றுப்புறத்தையும் தன் இல்லத்தையும் மிக சுத்தமாகப் பராமரித்தல். எண்ணம், சொல், செயலும் கூடத் தூய்மையாக இருத்தல் அவசியம். தூய்மை உள்ள இடத்தில் செல்வம் சேரும் என்பது நாம் அறிய வேண்டிய உண்மை.
25 துரோகமின்மை: பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்.
பிறர் பிழை பொறுத்தல் என்றும் இதைக் கூறலாம். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்னும் குறள் இதற்குப் பொருத்தமானது.
26 தன்மான இழப்பு: மதிப்பை எதிர்பார்க்காமல் இருப்பது.
அதாவது, உயர்வு மனப்பான்மையும், செருக்கும் கொள்ளாதிருத்தல். அகங்காரத்தை அறவே ஒழித்துக்கட்ட இதுவே சிறந்த வழி.

இவை யாவும் தெய்வீக சம்பத்து பெற்ற மனிதரின் இலட்சணங்கள். இந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் மனிதன் தான் என்னிடம் பக்தி செலுத்தத் தகுதி படைத்தவன் என்கிறார் கண்ணபிரான்.

இத்தகைய தெய்வீகக் குண இயல்புகளைப் பற்றி அர்ச்சுனனுக்கு உபதேசித்ததோடு மட்டுமின்றி அசுரசம்பத்து எனப்படும் கீழ்மைக் குண இயல்புகள் பற்றியும் அவர் மிகத் தெளிவாகக் கூறி விவரிக்கின்றார். இப்படிப்பட்டவர்களை அவர் அசுரர் என்று குறிப்பிடுகின்றார்.

அசுரர்கள் என்றால் நாம் உடனே பருத்த உடலும், பரட்டைத் தலைமுடியும், கொம்புகளும், கோரைப் பற்களும், பெரிய மீசையும், முட்டைக் கண்களும், கொடூரமான தோற்றமும் கொண்டவர்களாகப் புராணங்களில் விவரித்தபடி, திரைப்படங்களில் பார்த்தபடி கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அது உண்மையல்ல. மென்மையான, இனிமையான முகத்துடனேயே, நாகரீக நடை, உடை, பாவனைகளுடனேயே பொய்யும், களவும், சுயநலமும், துரோக எண்ணமும், கொடிய நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபடுபவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

வெளியில் பார்த்தால் அசுரர் என்று தெரியாது. ஆனால் உள்ளத்தில் வஞ்சகம். வெளியில் நடிப்பு. அசுரர்களிடம் அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டுமே இருக்காது. அவர்களைப் பார்த்தவுடன் கண்டுபிடிக்க இயலாது. அவர்களிடம் முறையான நடத்தையோ, உண்மைத் தன்மையோ இருக்காது. சமுதாயத்தில் மதிப்பும்இ மரியாதையுமாகத் தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் கூட, மிக நெருங்கிப் பழகினால் மட்டமானவர்களாக இருப்பார்கள். வெளியில் தெரியாது. உடலைத் தனதென்று நினைத்து, அதைப் பேணி அந்த உடல் இன்பத்திற்காகவே வாழ்ந்தும், வாழ விரும்பியும், இந்த உடலே நான் என்றும் கருதுபவர்கள் அசுரர்கள்.

எனக்கு மரணமில்லை. நான் எப்போதும் வாழ்ந்து, மகிழ்ந்து, சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். தான் வாழ்ந்தால் போதும், பிறர் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று சுயநலத்துடன் அறநெறி தவறி வாழ்வார்கள். இந்த நினைப்பும் இதற்கான முனைப்பும் தான் அசுர சம்பத்து. அதாவது தீய செல்வம் எனப்படும்.

தீய குணங்கள் பின்வருமாறு:

1 டம்பம்: ஆடம்பரம், வீண் பெருமை ஆகியவை இங்கு டம்பம் என்று குறிப்பிடப்படுகின்றது. வெளிப் பகட்டுடன் செயற்கைப் பெருமையைக் காட்டிக்கொள்ளுதல். நான், நான் என்று தன்னைத் தூக்கி நிறுத்த, முன்னிலைப்படுத்த விரும்புதல்..

2 இறுமாப்பு: அகந்தை, கர்வம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நடந்துகொள்ளுதல். தமது கல்வி, செல்வம், பதவி ஆகியவற்றால் இப்படிப்பட்டவர்கள் கர்வமும் பெருமையும் கொள்கின்றனர். இறுமாப்பு உடையவர்கள் பிறரைத் துச்சமாக நடத்துவார்கள். அவமதிப்பார்கள்.

3 கர்வம்: வீண் அபிமானம்: தான் சொல்வதும், செய்வதும் தான் சரி என்ற மனப்போக்கு. பெருமைக்காகப் பேசுவது, தேவையற்ற ஆடம்பரப் பொருள்களை வாங்கி அதைப்பற்றிப் பெருமையடித்துக்கொள்வது போன்ற செயல்கள் கர்வத்தினாலேயே வெளிப்படுகின்றன. நன்மை கருதி செயல்படாமல் வீண் கர்வத்தினால் இப்படிப்பட்டவர்கள் செயல்படுவார்கள்.

4 கோபம்: கோபம் என்பது அகங்காரத்தின் வெளிப்பாடு. தனக்கு எதிராக யாரும் செயல்படும்போது, அல்லது கருத்து வேறுபாடு ஏற்படும்போது உண்டாகின்ற உணர்ச்சியே கோபம். சினத்தினால் வன் சொற்களும், கடுமையான அல்லது கொடூரமான நடிவடிக்கைகளும், வெறுப்பும், பகையும் ஏற்பட்டுவிடும். கோபம் உடல் நலத்திற்குக் கேடு.

5 கொடூரம்: மனம், வாக்கு, செயல்களில் கடுமையும், கொடுமையும் கொண்டிருத்தல். இக்குணத்தால் தீமை தான் விளையும். வன்முறை வளரும். தண்டனை கொடுக்கின்ற எண்ணமும், பகை வளர்க்கும் பண்பும் வாய்க்கும்.

6 அஞ்ஞானம்: அறியாமை என்னும் இந்தப் பண்புதான் அசுர குணங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம். நல்லது, பொல்லாதது, உண்மை, பொய், கடமை, கடமையல்லாதது, செய்யத்தக்கது, செய்யதகாதது போன்றவற்றை அறியாமல் எதைச்செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற அறிவின்றித் தம் சுய விருப்பத்தின்படி, மனம் போன போக்கில் அவர்கள் எதையும் சொல்வார்கள், செய்வார்கள், சிந்திப்பார்கள்.இப்படிப்பட்டவர்கள் தன்னிடம் பக்தி செய்யத் தகுதியற்றவர்கள் என்கிறார் கீதாச்சார்யன்.

தெய்வ – அசுர சம்பத் விபாக யோகம்

இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதனே உயர்ந்த படைப்பு. இந்த மனிதனும் தனது பூர்வ ஜன்ம கர்மப் பலனால் கிடைத்த உடல், சூழ்நிலை ஆகியவற்றை வைத்துக்கொண்டுதான் வாழ வேண்டும். இந்த உடம்பும், உறவுகளும் நாம் கேட்டுப் பெற்றவையல்ல. நமக்கு அமையும் சூழ்நிலையும் நம் விருப்பத்திற்கேற்ப அமைவதில்லை. நமது முந்தைய பிறவிகளின் கர்மப்பலனே இன்றைய வாழ்க்கை. நமது இன்றைய செயல்பாட்டின் பிரதிபலிப்புதான் நாளைய வாழ்க்கை. இதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டாலே மனதில் பாதி நிம்மதி ஏற்பட்டு விடும்.

இப்படிப்பட்ட இந்த உண்மைகளை அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பைப் பூர்வஜென்ம முயற்சிகளின் தொடர்ச்சியாக ஒரு சிலரே இந்தப் பிறவியில் பெறுகின்றனர். அப்படிப்பட்டவர்களால் தான் இப்படிப்பட்ட உயர்ந்த நூல்களைப் படிக்கும் ஆர்வமும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு உபதேசத்தின் மூலம் ஞானம் பெறவும், தன்னைப்பற்றித் தானே ஆராய்ந்து, குறை நிறைகளை அறிந்துகொண்டு, குறைகளைப் பயிற்சியாலும், முயற்சியாலும் நீக்கி, நிறைகளை மேலும் வளர்த்துப் பூரணப்பட முடியும்.

சிந்தனை தான் மனிதனின் தன்மைகளை உயர்த்துகின்றது. சிந்தித்துப் பார்ப்பதன் மூலமே ஒருவன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும். மேம்படுத்திக்கொள்ள முடியும். மகான்கள், பெரியோர்கள், சமுதாயம் ஆகியவை கற்றுக்கொடுத்த நற்பண்புகளை ஆராயாமல் நம்முடையவையாக ஏற்று நம்மை நாம் மாற்றிக்கொண்டுவிட முடியாது. சிந்திக்கப் பழக வேண்டும். ஏனெனில், அப்படிப் பிறரால் சொல்லித்தரப்பட்ட அறநெறிகளை நம் வசதிக்கேற்பப் பயன்படுத்திக் கொள்கிறோமே தவிர அவற்றை நம் இயல்பாக நாம் மாற்றித் தன்வயப்படுத்திக்கொள்வதில்லை. பிறரால் சொல்லப்பட்டவை பெரும்பாலும் வசதியான நேரத்தில் கைவிடப்படும். ஆகவே நாமே சிந்தித்துச் சுயமாகவும், சரியாகவும் புரிந்துகொண்டால் தான் அவற்றை நமது குணமாக ஆக்கிக்கொள்ள முடியும்.

இந்தத் தன்மை ஆன்மீக சாதகர்களாகிய நமக்கு மிக அவசியம். ஏனென்றால் இந்த அத்தியாயத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய தெய்வீகக் குணங்களாக சில அம்சங்கள் கண்ணபிரானால் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு நம்மிடம் இருந்தால் களையப்படவேண்டிய தீய குணங்களைப் பற்றியும் பகவான், அவை அசுர குணங்கள் என்று கூறி அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் எடுத்துரைத்து எச்சரிக்கவும் செய்கின்றார்.

இந்த இடத்தில் இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து ஆழ்ந்த கவனத்துடன் வாசித்துக்கொண்டு வருபவர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். ஏற்கனவே சேத்ர-சேத்ரக்ஞ விபாக யோகம் என்னும் 13வது அத்தியாயத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய நன்னெறிகளாக 20 அம்சங்களைப் பரந்தாமன் உபதேசித்திருக்கின்றாரே, இப்போது மீண்டும் அதையே திரும்பச் சொல்கின்றாரா? என்று ஒரு குழப்பம் ஏற்படும். அழியக்கூடிய இந்த உடலை அறியாமையால் நான் என்று நினைத்து நாம் வாழ்கின்றவரை இந்த உடலின் உள்ளே இருந்து இதனை இயக்கிக்கொண்டிருக்கின்ற சேத்ரக்ஞனை வெளிப்படுத்த முடியாது. எனவே உடலை நான் என்று சொல்லாமல் இது என்று நம்மிலிருந்து வேறான ஒன்றாக இதனை உணர்ந்து பிரித்துச் சொல்லக்கூடிய தன்மையைப் பெறுவதற்குத் தான் 20 சாதனங்களைக் கண்ணன் அங்கு எடுத்துரைத்தார்.

மாறுதல்களுடன் கூடிய இந்த சரீரம் தன்னிலும் வேறுபட்டது என்பது நன்கு வெளிப்படையாகப் புலப்படுவதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் தான் அங்கு கண்ணனால் சொல்லப்பட்டன. இங்கு அவர் சொல்லி விளக்குவது மனிதர்களின் குண இயல்புகளின் அடிப்படையில் சிலர் தெய்வீக இயல்புகளைக் கொண்டவர்களாகவும், வேறு சிலர் அசுர குணங்களைப் பிறவியிலிருந்தே கொண்டிருப்பவர்களாகவும் இருக்கின்ற படைப்பின் விசித்திரத்தைப் பற்றித்தான்.

எனவே தெய்வீக நிலைக்கு ஆன்ம சாதகர்கள் உயர வேண்டுமென்றால் அல்லது தம்மைத் தாமே திருத்திக்கொள்ள விரும்புகின்ற நிலையில் இருப்பவர்கள் இங்கு பார்த்தசாரதியால் சொல்லப்படுகின்ற நற்குணங்கள் அத்தனையையும் அறிந்து, சிந்தித்து அவற்றைத் தம்முடையவையாய்; ஏற்க வேண்டும். அவற்றைத் தம்மில் பிரதிபலிக்கச் செய்தல் வேண்டும். சாத்வீகத் தன்மையுடன் செயல்படுபவர்கள் தெய்வீகப் பாதையில் முன்னேறிச் செல்கின்றனர். ரஜஸ், தமஸ், குணங்களில் செயலாற்றுபவர்களுக்கு இப்படி முன்னேறிச் செல்ல வாய்ப்புக்கள் இல்லை. இந்த ஜட உலகிலேயே மனிதர்களாகவோ அல்லது மிருகங்கள் போன்ற தாழ்ந்த பிறவிகளாகவோ தான் அவர்கள் மீண்டும் பிறக்க வேண்டி இருக்கும். இந்த விவரங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதன் மூலம் நம்மை நாமே உற்றுக் கவனித்துக் கூடாத அசுர குணங்களைத் திருத்திக்கொள்ள முடியும் அல்லவா!

இனி, பகவான் அர்ச்சுனனுக்கு உபதேசித்த அந்த 26 தெய்வீக சம்பத்தான நற்குண இயல்புகள் என்னென்ன என்று பார்ப்போம்.

1 அஞ்சாமை: திடமான நம்பிக்கையுடன் என்னிடமே ஈடுபட்டு, அச்சமின்றி வாழ்தல்.
அதாவது, வாழ்க்கையில் எது நடந்தாலும் அஞ்சாமல் அதை ஏற்று இறை நம்பிக்கையுடன் வாழ்தல்.
2 உள்ளத்தூய்மை: உள் மனதில் என்னை அடைய வேண்டும் என்ற திடமான, தீவிர விருப்பம் கொண்டிருத்தல்.
அதாவது, இந்த விருப்பம் கொண்டவர்களால் தீய எண்ணங்களையோ, தீய விருப்பங்களையோ மனதில் கொள்ள முடியாது. தெய்வ பக்தியில் ஈடுபட்டு எண்ணங்களின்றி உள்ளம் தூய்மை பெற்றுத் திகழும்.
3 ஞானயோகத்தில் உறுதி: என்னைத் தத்துவ விளக்கத்துடன் அறிவதற்கு, எந்தச் சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பது.
அதாவது, பதட்டமில்லாமல் செயல்படுகின்ற தன்மை நம்மில் ஏற்பட்டால் தான் ஆன்மீகத்தை நன்கு புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள முடியும். ஞானம் பெறுவதற்கு சமநிலை அவசியம்.
4 ஈகை: சாத்வீகமான தானம் செய்தல் சிறந்தது.
தர்மம் செய்வதில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றில் சாத்வீக தர்மமே சிறந்தது என்று கண்ணன் கூறுகின்றார். உண்மையான ஆன்மீக விழிப்புணர்விற்காக அதன் வளர்ச்சிக்காக செலவு செய்தல்.
5 தன்னடக்கம்: ஐம்புலன்களையும் சுயக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
வெளிப்புறமாக அறியாமையுடன் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஐம்புலன்களையும் தத்தம் இடத்தில் நிலை நிறுத்துதல்.
6 வேள்வி: தன் குலக்கடமைகளை முறையாகச் செய்து வருதல்.
அவரவர் தாம் பிறந்த குலத்திற்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை ஏற்று அவற்றைத் தவறவிடாமல் கடைப்பிடித்தல்.
7 சாஸ்திரங்களில் நம்பிக்கை: சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட நீதிகளைத் தம் வாழ்க்கை நெறிகளாக மேற்கொள்ளுதல்.
8 தவம்: தன் கடமைகளைச் செய்கின்றபோது வரும் இன்னல், இடையூறுகளை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ளுதல்.
அதாவது, தவம் என்றவுடன் தனிமையான ஓரிடத்தில் கண்ணை மூடி அமர்ந்திருத்தல் என்றுதான் நாம் நினைப்போம். காட்டிற்குச் சென்று தவத்தை மேற்கொள்ளுவதும் தவம் என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உண்மையான தவம் எது என்பதைக் கண்ணன் இங்குக் கூறியுள்ளார்.
9 எளிமை: உடலாலும், உள்ளத்தாலும், வாக்காலும், செயல்களாலும் சரியாக, எளிமையாக வாழ்தல்
10 கொல்லாமை: உடல், உள்ளம், வாக்கால் எந்தப் பிராணிக்கும் சிறிதளவேனும் துன்பம் தராதிருத்தல். அதாவது, உண்மையான அகிம்சை என்பது எவருடைய நல் வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் எந்த விதத்த்pலும் தொல்லை கொடுக்காமல் இருப்பது.

‘இந்த உலகில் அழிபவர், அழிவற்றவர் என இரு வகை புருஷர்கள் உள்ளனர். இவர்களுள் எல்லாப் பிராணிகளின் சரீரங்களும் அழியக்கூடியவை. ஆனால் அச்சரீரங்களுக்குள் உறைகின்ற, அவற்றை இயக்குகின்ற ஜீவாத்மா அழிவற்றது”. அழிவது உடல் மட்டுமே. ஆத்மா அழிவற்றது என்பதே இதன் பொருள்.

‘இந்த இரண்டு வகை புருஷர்களைத் தவிர உத்தம பருஷர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் பரமாத்மா. பரம்பொருள், அவர் தான் பாதாளம், பூமி, வானுலகம் எனப்படும்; மூவுலகங்களையும் மற்ற பிற உலகங்களையும் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றார். அவர் அழிவற்றவர். அவரே எல்லோருக்கும் தலைவர்”.

இந்த இடத்தில் அர்ச்சுனன், இவர்களில் நீங்கள் யார்? என்று கேட்கிறான். அதற்குக் கண்ணனின் பதில், ‘அர்ச்சுனா! அந்த உத்தமபுருஷன் நான் தான்! நான் அழிவு நிலையைக் கடந்தவன். அழியா நிலையில் இருக்கும் ஆத்மாவை விட மேலான உத்தம புருஷ நிலையில் நான் இருக்கிறேன். இந்நிலையில் எல்லாமாக இருந்துகொண்டே அதி உயர் நிலையிலும் இருக்கின்ற என்னை, இவ்வுலகம் பரமாத்மா என்று அழைக்கின்றது”.

நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய வியக்கத்தக்க அந்த உண்மை இங்கு நமக்காகத் திரும்பவும் விரித்துரைக்கப்படுகின்றது. சூட்சமமாகவும் சொல்லப்படுகிறது. அந்த உண்மையை நாம் மிகச் சரியாக, தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான், கூறியது கூறல் குற்றம் எனத் தெரிந்தாலும், மனதில் பதிய வேண்டிய ஒன்று என்பதால் மீண்டும் ஒரு முறை இதனை விளக்குகின்றேன்.

அதாவது, பரமாத்மா தான் தன் விருப்பத்தால் இந்தப் பிரபஞ்சமாக, உயிரினங்களாக, மனித குலமாகத் தானே பல்வேறு வேடம் தாங்கிக் கர்மப்பின்னலைப் போட்டுக்கொண்டு, பிறந்து, வாழ்ந்து, நடித்துக்கொண்டிருக்கிறது. அது தானே மாயையாகவும் இருந்து அந்த மனிதப்பிறவியை ஆட்டிப்படைக்கின்றது.

தன்னைத் தானே அது மனிதனின் உள்ளத்தில் ஒளித்துக்கொண்டு, மனதை வெளிப்புறமாகத் திருப்பிப் புலன்களின் வழியே செலுத்தி, அறியாமையுடன் மனிதனை அல்லாட வைக்கிறது. அடிபட்டு, மிதிபட்டு அந்த மனம் சிதைந்து, எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று உண்மையாக அழத் துவங்குகின்ற போது ஏதாவது ஓரு வடிவில் அது தானே வந்து அழுபவனின் நிலைக்கு ஏற்றபடி அவனை வழி நடத்துகிறது.

ஜீவன் உண்மையிலேயே இந்த வாழ்க்கையால் மனம் வெறுத்துக் கடைத்தேற வேண்டும் என்று கதறினால் அப்படிப்பட்டவனின் உண்மைத் தன்மையை அது புரிந்துகொண்டு சத்தியத்தை அவனுக்கு உபதேசிக்க மனித உரு எடுத்துக் குருவாக வருகிறது. அப்படி அகில குருவாக அந்தப் பரமாத்மா கண்ணன் என்ற மனித உருவில் மனித குலத்திற்கே சரியான விதத்தில் சத்தியத்தை உணர்த்துவதற்காக வந்து பிறந்தார்.

உத்தம புருஷனாகிய ஆதி பகவன் மனித குலத்தை உய்விக்கத் தானே கண்ணனாய்ப் பிறந்திருப்பதைத் தனது உத்தம பக்தனாகிய அர்ச்சுனனுக்கு இதை விட வேறு எப்படிப் புரிய வைக்க முடியும்? அர்ச்சுனன் ஒரு கருவியாய் நின்று நமக்காக இந்த உபதேசத்தைப் பெற அதனை வியாசர் பகவத்கீதை என்னும் அறிய செல்வமாய் நமக்கு அள்ளித் தந்திருக்கிறார். இதனை நன்றாக சிந்தித்துப் பார்த்து அந்தப் பரமாத்மாவின் பாத மலர் பணிந்து நன்றி தெரிவிக்க வேண்டிய தருணம் இது. அன்பர்களே! உணர்ச்சி வசப்பட்டு நான் இதனை எழுதவில்லை. உண்மையை உணர்ந்த பரவசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!

“மூன்று நிலைகளில் செயல்படுகின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாம் நானே! அவற்றிற்கும் மேலான அவ்யக்த நிலையில் நுண்ணுணர்வாய், எல்லாமாய் இருக்கின்றபடியால் தான் இந்த உலகத்த்தில் மக்களாலும், வேதங்களாலும் புருஷோத்தமன் என்னும் திருநாமத்தால் பிரபலமடைந்திருக்கின்றேன்”.
trimurthi

‘மதி மயக்கம் இல்லாத உத்தம பக்தன் என்னைப் புருஷோத்தமன் என்று அறிந்துகொள்கிறான். அப்படிப்பட்டவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான். அவனுக்கு பெறுவதற்கு என்று வேறு ஒன்றும் மிஞ்சுவதில்லை. என்னிடமே ஈடுபாடு கொண்டவனாய் அவன் என்னைப் போற்றிப் பரவசமடைகிறான்.’

இவ்வளவையும் தெளிவாக அர்ச்சுனனுக்குக் கூறி விளங்க வைத்த புருஷோத்தமனாகிய கண்ணன் கடைசியில், ‘அர்ச்சுனா! இதுவரை நான் உனக்கு உபதேசித்ததெல்லாம் மிகவும் ரகசியமான தெய்வ தத்துவங்கள். இதை அறிந்துகொண்டதன் மூலம் என் பக்தன் அறிய வேண்டியதை அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும், அடைய வேண்டியதை அடைந்தவனாகவும் ஆகிறான்!” என்று சொல்லி முடிக்கின்றார்.

அந்தப் புருஷோத்தமனின் பேரருளால் நாமும் இந்த தெய்வ ரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடிய பாக்கியத்தைப் பெற்றவர்களாக ஆகிறோம். இதனைத் தொடர்ந்து படித்து வரும் ஒவ்வொரு அன்பர்களுமே இந்தப் பேற்றினைப் பெற்றவர்கள் ஆவார்கள். இந்த கீதை என்னும் பேரமுதத்தை மீண்டு;ம் மீண்டும் படித்துப் பார்த்து, நன்றாகப் புரிந்துகொண்டு கீதை காட்டும் பாதையிலேயே நாம் இனி நடக்கப் பழக வேண்டும். புலன்வழிப் பாதையை விட்டு நீங்கி ஞான ஒளிப்பாதையில் இனி நடக்க வேண்டும். இது தான் நாம் இனி செய்ய வேண்டிய செயல்.

என்ன? பற்றின்மை என்னும் வாளினால் சம்சாரமாகிய அஸ்வத்த மரத்தை வெட்டத் துவங்கிவிட்டீர்களா? நல்லது. இதற்குக் கண்ணன் அருள் எப்போதும் துணை செய்யும். (தொடரும்…)

வாழ்க்கையின் கடைசி நிலை சந்நியாசம். உலக விருப்பங்களையும், பந்த பாசங்களையும், பொறுப்புக்களையும் அறவே ஒதுக்கி விட்டு, வீட்டில் இருந்தாலும் கூடத் தனிமையை விரும்பி இறை உணர்வோடு ஒன்றியிருத்தலும், எண்ணங்களையும், ஆசைகளையும் இல்லாமற் செய்து, பற்றற்று வாழ்கின்ற நிலையே இந்த சந்நியாசம் என்பது.

ashram_sanyasiஇந்நிலையில் இந்த உடலும் முதுமையினால் தளர்ந்துவிடும். உடல் தளர்ந்து போனாலும் ஆசை வயப்பட்டு இன்னும் ஓடித் திரியாமல், பிறருக்குத் தொந்தரவு தராமல், அடங்கியிருத்தலும் சந்நியாசம் தான். இப்படி இந்த முறையில் தம் வாழ்க்கையை வாழ்கின்றவர்கள் பாக்கியவான்கள். இப்படிப்பட்டவர்களே ஜீவன் முக்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

‘இத்தகைய, பற்றறுத்தவர்கள் உடல் விழுந்தவுடன் பரவெளியில் கலந்து முக்தி அடைந்து விடுகிறார்கள். இவர்களுக்குப் பிறகு இவ்வுலகில் பிறப்பு எடுப்பது என்பது கிடையாது. மேல், கீழ் உலகங்களுக்கும் இவர்களின் ஜீவன் சென்று தங்குவது கிடையாது’.

‘இந்த ஜீவன்கள் அழியா நிலை அடைந்துவிடுகின்றன. ஆயிரம்கோடி சூரியப் பிரகாசமுடைய அந்த இடத்தை, சூரியன், சந்திரன், அக்னி போன்றவற்றின் ஒளியால் பிரகாசப்படுத்து முடியாத அந்த இயற்கைப் பேரொளியாகிய அண்டத்தை அடைந்த பின் அவர்கள் மீண்டும் பூவுலகிற்குத் திரும்புவதில்லை.’

ஆனால், இந்த நிலையை ஜீவன் அடைய முடியாமல் ஐம்புலன்களுடனும், மனம், புத்தியுடனும் சேர்ந்து அறியாமையுடன் செயல்படுகின்றபடியாலும், இது நான், இது என்னுடையது என்ற எண்ணத்துடனேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மரணிப்பதாலும் இந்த ஜீவாத்மா மறுபடி மறுபடி உடலெடுத்துப் பிறந்து வந்து சம்சாரக் கடலில் மூழ்கிப் போகிறது. இது தான் வாழ்வைப் பற்றிய உண்மை!

அப்பா! மூச்சு முட்டுகிறதா? இருந்தாலும் இப்போது இந்த கணத்தில் நமது சனாதன தர்ம்த்தின் அற்புதப் பெருமையை எண்ணிப் பாருங்கள். நமது முன்னோர் வழங்கிய இந்த உண்மைகளை அறிந்துகொள்ளவே இன்று மேற்குலகம் அலை மோதுகின்றது. ஆனால் நம்மவர்களோ நம் பெருமை மறந்து உடல் சார்ந்த வாழ்க்கை முறையில் மாறி, அதில் ஊறிப்போய் அழிந்து கொண்டிருக்கின்றனர்.

இன்னும் கேளுங்கள், கண்ணன் அருளமுதத்தை! ‘காற்று எப்படி வாசனை உள்ள இடத்திலிருந்து அதனை எடுத்துச் செல்கிறதோ, அந்த வாசனையை எப்படி எங்கும் பரப்புகின்றதோ, அதுபோல சரீரம், புலன்கள் ஆகியவற்றிற்கு உரிமையாளனாகத் தன்னை எண்ணிக்கொண்டு இயங்கும் ஜீவாத்மா, கடைசி காலத்தில் தன் உடலைத் துறக்கும்போது, அவ்வுடலில் அதுவரை இருந்து வந்த மனதையும், புலன்களையும் எடுத்துக்கொண்டு வேறொரு உடலில் பிரவேசிக்கின்றது. இவ்வாறாக அது இறந்தும், பிறந்தும் இவ்வுலக வாழ்வில் உழன்றுகொண்டிருக்கிறது.”

‘இப்படிப் பிறந்து பிறந்து மீண்டும் மீண்டும் புலன் வழிப்பாதையிலேயே அறியாமையுடன் சென்றுகொண்டிருக்கின்ற வரையில் இதற்கு விடுதலை இல்லை. யார் இந்த உண்மையை ஏதாவது ஒரு வேளையில் புரிந்து கொள்கின்றார்களோ அவர்கள் அப்பொழுதுதான் இந்த வாழ்க்கை பற்றி அறியத் தமது தேடலைத் துவங்குகின்றார்கள். இந்நிலையை அடையப் பிரம்மமும் துன்பங்களையும் தடைகளையும் தோல்விகளையும் அடுக்கடுக்காகத் தந்து அடி போடுகிறது”.

‘ஏன் இப்படி நடக்கிறது? ஏன் இந்த நிலை எனக்கு ஏற்பட்டது? என்று மனப்பூர்வமாகச் சிந்திக்கின்றவர்களும் தெய்வத்தை சரணடைந்தவர்களும் ஒரு வழியாகப் புலன் வழிப்பாதையை விடுத்து ஞான வழிப்பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்”.

‘இவ்வாறு மெய்யறிவாகிய ஞானமென்னும் கண்களைப் பெற்ற விவேகிகளான மனிதர்கள் உண்மையை அறிந்து கொள்கின்றனர், யார் மனத்துதூய்மையை அடைகின்றார்களோ அவர்களுக்கே ஞானக் கண்கள் திறக்கும். வாழ்வின் உண்மை நிலை அப்போது புரியும்”.

இவ்வாறு உரைத்த கிருஷ்ணர் இனி தன்னைப் பற்றி மீண்டும் பேசுகின்றார். ‘சூரியன், சந்திரன், தீ ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகிய நான் தான் எல்லா உலகங்களிலும் பேரொளியாகப் பிரகாசிக்கின்றேன். எல்லா உயிரினங்களையும் என் சக்தியால் வாழ வைப்பதும், ரசமயமான சந்திரனாக உருவெடுத்து மூலிகைகளையும், தாவரங்களையும், வளர்த்துச் செழிக்க வைப்பதும் நான் தான்”.

‘பிராணிகளின் உடலுக்குள் வைஸ்வானரன் என்னும் அக்கினியாக நான் இருந்து, சுவைத்தல், குடித்தல், உறிஞ்சுதல், நக்குதல் என்னும் நான்கு விதங்களில் உணவைப் புசிக்கச்செய்து அவ்வுணவுகளை ஒன்றாக்கி எரித்து சீரணிக்கச் செய்கின்றேன். என்னால் தான் நினைவாற்றல், பகுத்தறிவு, ஐயம் தெளிதல் எல்லாம் நிகழ்கின்றன. வேதங்களும், வேத உண்மைகளும் அதை வகுத்தவனும் அவற்றை அறிபவனும் நானே”.

இந்த இடத்தில் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். இதுவரை நான் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்த செயல்கள் எல்லாமே இறை சக்திதான் செய்து கொண்டு வருகிறது. வாயில் போடுகின்ற உணவு எப்படியெல்லாம் மென்று விழுங்கப்படுகிறது என்று கண்ணன் சொல்கின்ற இந்த ஓர் உதாரணத்தின் மூலமே, இங்கு எல்லாமே அவன் தான் செய்கிறான் என்பதையும், அதற்கு இந்த உடல் வெறும் கருவி மட்டுமே என்பதையும் காட்டுகிறது. இனியாவது நான் செய்தேன்! என்று எதற்காகவும் கர்வப்படாமல், அவன் கருணை என்று பணிகின்ற பக்குவம் நமக்கு ஏற்படட்டும்.

‘இந்த உலகில் அழிபவர், அழிவற்றவர் என இரு வகை புருஷர்கள் உள்ளனர். இவர்களுள் எல்லாப் பிராணிகளின் சரீரங்களும் அழியக்கூடியவை. ஆனால் அச்சரீரங்களுக்குள் உறைகின்ற, அவற்றை இயக்குகின்ற ஜீவாத்மா அழிவற்றது”. அழிவது உடல் மட்டுமே. ஆத்மா அழிவற்றது என்பதே இதன் பொருள்.

‘இந்த இரண்டு வகை புருஷர்களைத் தவிர உத்தம பருஷர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் பரமாத்மா. பரம்பொருள், அவர் தான் பாதாளம், பூமி, வானுலகம் எனப்படும் மூவுலகங்களையும் மற்ற பிற உலகங்களையும் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றார். அவர் அழிவற்றவர். அவரே எல்லோருக்கும் தலைவர்”.

இந்த இடத்தில் அர்ச்சுனன், இவர்களில் நீங்கள் யார்? என்று கேட்கிறான். அதற்குக் கண்ணனின் பதில், ‘அர்ச்சுனா! அந்த உத்தமபுருஷன் நான் தான்! நான் அழிவு நிலையைக் கடந்தவன். அழியா நிலையில் இருக்கும் ஆத்மாவை விட மேலான உத்தம புருஷ நிலையில் நான் இருக்கிறேன். இந்நிலையில் எல்லாமாக இருந்துகொண்டே அதி உயர் நிலையிலும் இருக்கின்ற என்னை, இவ்வுலகம் பரமாத்மா என்று அழைக்கின்றது”.

நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய வியக்கத்தக்க அந்த உண்மை இங்கு நமக்காகத் திரும்பவும் விரித்துரைக்கப்படுகின்றது. சூட்சமமாகவும் சொல்லப்படுகிறது. அந்த உண்மையை நாம் மிகச் சரியாக, தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான், கூறியது கூறல் குற்றம் எனத் தெரிந்தாலும், மனதில் பதிய வேண்டிய ஒன்று என்பதால் மீண்டும் ஒரு முறை இதனை விளக்குகின்றேன்.

அதாவது, பரமாத்மா தான் தன் விருப்பத்தால் இந்தப் பிரபஞ்சமாக, உயிரினங்களாக, மனித குலமாகத் தானே பல்வேறு வேடம் தாங்கிக் கர்மப்பின்னலைப் போட்டுக்கொண்டு, பிறந்து, வாழ்ந்து, நடித்துக்கொண்டிருக்கிறது. அது தானே மாயையாகவும் இருந்து அந்த மனிதப்பிறவியை ஆட்டிப்படைக்கின்றது.

தன்னைத் தானே அது மனிதனின் உள்ளத்தில் ஒளித்துக்கொண்டு, மனதை வெளிப்புறமாகத் திருப்பிப் புலன்களின் வழியே செலுத்தி, அறியாமையுடன் மனிதனை அல்லாட வைக்கிறது. அடிபட்டு, மிதிபட்டு அந்த மனம் சிதைந்து, எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று உண்மையாக அழத் துவங்குகின்ற போது ஏதாவது ஓரு வடிவில் அது தானே வந்து அழுபவனின் நிலைக்கு ஏற்றபடி அவனை வழி நடத்துகிறது.

ஜீவன் உண்மையிலேயே இந்த வாழ்க்கையால் மனம் வெறுத்துக் கடைத்தேற வேண்டும் என்று கதறினால் அப்படிப்பட்டவனின் உண்மைத் தன்மையை அது புரிந்துகொண்டு சத்தியத்தை அவனுக்கு உபதேசிக்க மனித உரு எடுத்துக் குருவாக வருகிறது. அப்படி அகில குருவாக அந்தப் பரமாத்மா கண்ணன் என்ற மனித உருவில் மனித குலத்திற்கே சரியான விதத்தில் சத்தியத்தை உணர்த்துவதற்காக வந்து பிறந்தார்.

உத்தம புருஷனாகிய ஆதி பகவன் மனித குலத்தை உய்விக்கத் தானே கண்ணனாய்ப் பிறந்திருப்பதைத் தனது உத்தம பக்தனாகிய அர்ச்சுனனுக்கு இதை விட வேறு எப்படிப் புரிய வைக்க முடியும்? அர்ச்சுனன் ஒரு கருவியாய் நின்று நமக்காக இந்த உபதேசத்தைப் பெற அதனை வியாசர் பகவத்கீதை என்னும் அறிய செல்வமாய் நமக்கு அள்ளித் தந்திருக்கிறார். இதனை நன்றாக சிந்தித்துப் பார்த்து அந்தப் பரமாத்மாவின் பாத மலர் பணிந்து நன்றி தெரிவிக்க வேண்டிய தருணம் இது. அன்பர்களே! உணர்ச்சி வசப்பட்டு நான் இதனை எழுதவில்லை. உண்மையை உணர்ந்த பரவசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!

‘மூன்று நிலைகளில் செயல்படுகின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாம் நானே! அவற்றிற்கும் மேலான அவ்யக்த நிலையில் நுண்ணுணர்வாய், எல்லாமாய் இருக்கின்றபடியால் தான் இந்த உலகத்த்தில் மக்களாலும், வேதங்களாலும் புருஷோத்தமன் என்னும் திருநாமத்தால் பிரபலமடைந்திருக்கின்றேன்”.

‘மதி மயக்கம் இல்லாத உத்தம பக்தன் என்னைப் புருஷோத்தமன் என்று அறிந்துகொள்கிறான். அப்படிப்பட்டவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான். அவனுக்கு பெறுவதற்கு என்று வேறு ஒன்றும் மிஞ்சுவதில்லை. என்னிடமே ஈடுபாடு கொண்டவனாய் அவன் என்னைப் போற்றிப் பரவசமடைகிறான்.’

இவ்வளவையும் தெளிவாக அர்ச்சுனனுக்குக் கூறி விளங்க வைத்த புருஷோத்தமனாகிய கண்ணன் கடைசியில், ‘அர்ச்சுனா! இதுவரை நான் உனக்கு உபதேசித்ததெல்லாம் மிகவும் ரகசியமான தெய்வ தத்துவங்கள். இதை அறிந்துகொண்டதன் மூலம் என் பக்தன் அறிய வேண்டியதை அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும், அடைய வேண்டியதை அடைந்தவனாகவும் ஆகிறான்!” என்று சொல்லி முடிக்கின்றார்.

அந்தப் புருஷோத்தமனின் பேரருளால் நாமும் இந்த தெய்வ ரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடிய பாக்கியத்தைப் பெற்றவர்களாக ஆகிறோம். இதனைத் தொடர்ந்து படித்து வரும் ஒவ்வொரு அன்பர்களுமே இந்தப் பேற்றினைப் பெற்றவர்கள் ஆவார்கள். இந்த கீதை என்னும் பேரமுதத்தை மீண்டு;ம் மீண்டும் படித்துப் பார்த்து, நன்றாகப் புரிந்துகொண்டு கீதை காட்டும் பாதையிலேயே நாம் இனி நடக்கப் பழக வேண்டும். புலன்வழிப் பாதையை விட்டு நீங்கி ஞான ஒளிப்பாதையில் இனி நடக்க வேண்டும். இது தான் நாம் இனி செய்ய வேண்டிய செயல்.

என்ன? பற்றின்மை என்னும் வாளினால் சம்சாரமாகிய அஸ்வத்த மரத்தை வெட்டத் துவங்கிவிட்டீர்களா? நல்லது. இதற்குக் கண்ணன் அருள் எப்போதும் துணை செய்யும்.